வேதம் பெரிது என்பார்
மனிதம் சிறிதென்பார்
தள்ளிடு மதங்களை மறுப்போடு ...
தொட்டால் தீட்டு என்பார்
பார்த்தால் பாவம் என்பார்
தூற்றிடு சாதியை வெறுப்போடு...
மத துரோகி என்பார் ஹராம் என்பார்
சாபம் விடுவார் சைத்தான் என்பார்
சகித்திடு அவர்களை சிரிப்போடு ...
ஏற்றதாழ்வுகள் இயல்பென்பார்
ஏகநாதனின் சித்தமென்பார்
ஏசி விடு அவர்களை கோபத்தோடு...
சட்டமென்பார் திட்டமென்பார்-தன்
சட்டைப்பைக்குள்ளே உலகமென்பார்...
எதிர்த்திடு ஏகாதிபத்தியத்தை தீரத்தோடு ...
புன்னகை மட்டுமே பெண்ணுக்கு அணிஎன்று
பொய் சொல்லித்திரியும் போலிச்சமுதாயம்
காட்டிடு கோபத்தை கொந்தளிப்போடு ...
இன்னல் போக என்ன வழியென்று
உன்னிடம் உன் மனம் கேட்கும் நாளில்
மார்க்சியம் படி அக்கறையோடு
தெளிவாய் உலகில் நடைபோடு...
இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் மகளே...
பார்த்தால் பாவம் என்பார்
தூற்றிடு சாதியை வெறுப்போடு...
மத துரோகி என்பார் ஹராம் என்பார்
சாபம் விடுவார் சைத்தான் என்பார்
சகித்திடு அவர்களை சிரிப்போடு ...
ஏற்றதாழ்வுகள் இயல்பென்பார்
ஏகநாதனின் சித்தமென்பார்
ஏசி விடு அவர்களை கோபத்தோடு...
சட்டமென்பார் திட்டமென்பார்-தன்
சட்டைப்பைக்குள்ளே உலகமென்பார்...
எதிர்த்திடு ஏகாதிபத்தியத்தை தீரத்தோடு ...
புன்னகை மட்டுமே பெண்ணுக்கு அணிஎன்று
பொய் சொல்லித்திரியும் போலிச்சமுதாயம்
காட்டிடு கோபத்தை கொந்தளிப்போடு ...
இன்னல் போக என்ன வழியென்று
உன்னிடம் உன் மனம் கேட்கும் நாளில்
மார்க்சியம் படி அக்கறையோடு
தெளிவாய் உலகில் நடைபோடு...
இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் மகளே...
No comments:
Post a Comment