Tuesday, 26 April 2016

போராட்டமே தீர்வடி... (23.07.2014)



தூங்கிப்போன தோழி - இப்போ
விடிஞ்சாச்சு எந்திரி 
அடங்கி ஒடுங்கி வாழ்ந்த வாழ்க்கை 
போதுமடி சுந்தரி
அடிச்ச அடிக்கு திருப்பி அடிக்க
இன்னும் என்ன பயமடி 

சுயமரியாதை செத்தபின்னே
வாழ்வதென்ன வாய்வழி
சொரனை இன்னும் சாகவில்லை
மிச்சமிருக்கு பாரடி

காட்டு விலங்கு பயந்தோடும் -நீ
பறையடிக்கும் சத்தத்தில் 
நாட்டு விலங்கைக் கண்டு நீயும்
நடுங்கலாமா அச்சத்தில் 

ஈனசாதி உடம்பென்று 
உன்னை நெருங்கும் நாய்களை 
'அந்த ' இடத்தில் எத்தடி - உன்
செருப்பைக் கழற்றி மொத்தடி

பல்ல காட்டி வழிபவனை 
காரி முகத்தில் துப்படி 
ஆம்பிள்ளைன்னா என்ன
ரெண்டு கொம்பான்னு கேளடி 

காலில் பிறந்த சூத்திரச்சின்னு
கேவலமா பேசினால் 
முப்பரிய அத்தெறி -அவன்
ஜாதி வெறிய கத்தறி

காரல் மார்க்சு கற்றுத்தந்த 
சித்தாந்த பலமடி 
வீரம், தியாகம், மனிதநேயம்
மூன்றும் கலந்த நிறமடி 
நீ செங்கொடியை ஏந்தடி 

புதிய உலகு படைப்பதற்கு 
போராட்டமே தீர்வடி 

No comments:

Post a Comment