Tuesday, 26 April 2016

ஒரு போராளியின் பதில் கடிதம் ... (27.1.2011)



சிறு குழந்தையின் அழுகுரலில்
சுத்த சங்கீதம்
நீ எப்படியடி எதிர்பார்ப்பாய் ...

தாய்பாலும் பசிதீர்க்கும்
புட்டிபாலும் பசிதீர்க்கும்,
புட்டிபாலை குடித்துவிட்டு
என்னிடம் தாய்பாசம் -நீ
எப்படியடி எதிர்பார்ப்பாய் .....

சொந்தங்கள் முள்முகாமுக்குள்
சிக்கியிருக்கும்போது -உன்
சிங்கார அழகில் நான்
சலனப்படுவேன் என்று -நீ
எப்படியடி எதிர்பார்ப்பாய் ...

தாய் மண்ணின் நிலை எண்ணி
நான் உறங்க போனால் ,
தொண்டை அடைத்து துக்கம் வரும்
இமை உடைத்து கண்ணீர் வரும்
இறுதியாக தூக்கம் வரும்
பிறகெப்படியடி காதல் வரும் ...

நம் தாய் மண்ணில் தமிழீழம்
நிச்சயம் மலரும்
காத்திரு என் கண்மணியே
கட்டாயம் வருவேன் ...

ஒருவேளை நான் சமரில்
சமாதி அடைந்தால்
உனக்கென்று  ஒரு வாழ்க்கை
உருவாக்கி வாழ்ந்துகொள் ...

எதிர்காலத்தில் உன் பிள்ளைகளுக்கு
சொல்லிகொடு மாவீரர்களின் தியாகத்தை ...

உனக்குள் மட்டும் சொல்லிக்கொள்
நானும் ஒரு மாவீரனை
காதலித்தேன் என்று......


No comments:

Post a Comment